பெங்களூர்: பிரதமர் மோடிக்கு கொலை விடுத்த கர்நாடகாவை சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் யாத்கிரி அடுத்த சூர்பூர் பகுதியை சேர்ந்த முகமது ரசூல் கதாரே என்பவர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதையடுத்து சூர்பூர் போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 505(1)(பி), 25(1)(பி) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். முன்னதாக தலைமறைவாக உள்ள முகமது ரசூல் கதாரேவை ஐதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.