ராமேஸ்வரம், ஏப்.25: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று அதிகாலை பலத்த இடி மின்னலுடன் சிறிது நேரம் மழையும் பெய்தது. பலத்த இடியினால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியில் இடி, மின்னலினால் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் வீட்டு உபயோக சாதனங்கள் சேதமடைந்தது. மேலும் அப்பகுதியில் கடற்கரையோரத்தில் இருந்த தென்னை மரம் ஒன்றும் இடி மின்னலால் தீப்பற்றி எரிந்தது. இருந்த போதும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.