மோர் உடலுக்கு நல்லது. ஆனால் மோரில் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து அருந்துவது தவறு. உணவகங் களில் இப்படிச் செய்கிறார்கள். மோரில் இப்படி இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்தால் அது மோரின் குணத்தைக் கெடுத்துவிடுகிறது. உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் கொஞ்சம் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். உறையாத தயிரை உண்பது மிகவும் தவறு. அது வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்களையும் உண்டாக்கும். இதனால் தேவையில்லாத வியாதிகள் ஏற்படும்.எப்போதும் தயிரைச் சூடு பண்ணவே கூடாது. தயிரைத் தாளிக்க வேண்டுமெனில் தனியாக தாளித்து, ஆறிய பிறகு தயிர் இருக்கும் பாத்திரத்தில் கொட்டிச் சேர்க்கலாம். தயிரை சூடு செய்வதால் அது ஒவ்வாத உணவாகிவிடுகிறது. காலப்போக்கில் இது அலர்ஜியை ஏற்படுத்தும்.
தயிர் சாப்பிட்டுவிட்டு வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. தயிர் குளிர்ச்சி நிறைந்தது. வாழைப்பழமும் கபத்தை அதிகரிக்கக்கூடியது. இரண்டும் சேர்த்துச் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கு இரவில் தயிர் சாதம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.செரிமானம் இல்லாதவர்கள் இரவில் தயிரை சேர்த்துக் கொள்ளவே கூடாது. இது பல வியாதிகளை உண்டு பண்ணிவிடும். கால் வீக்கம், முழங்கால் வீக்கம், இருப்பவர்கள் தயிரை தவிர்க்கவும். சளி நெஞ்சில் அடைத்துக் கொண்டு மூச்சுவிட சிரமப்படுபவர்கள் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். அல்லது மோராக பகலில் எடுத்துக்கொள்ளலாம். இரவில் தூக்கம் சரியாக வராதவர்கள் புளிப்பான தயிரை சாப்பிடக் கூடாது.ராகி கூழ், கம்பங் கூழில் மோர் கலந்து அருந்தும் போது கோடைகால வெப்பத்திற்கு ஏதுவாக அமையும். வயிற்றில் புண் இருப்போர் அதிகாலையில் மோரை , வெண்ணெயுடன் அருந்த வாய்ப்புண், வயிற்றுப் புண்கள் ஆறும். மேலும் காபி, டீ இவற்றிற்கு பதிலாகவும் கோடைகாலத்தில் மோர் அருந்துவது நல்லது.
– கவிதா பாலாஜிகணேஷ்.