கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புச்சோதனை தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் ஜெயலட்சுமி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனையில் ரூ.1.20 லட்சம் கைப்பற்றப்பட்டது.
கடலூர் அருகே பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புச்சோதனை தொடர்பாக 3 பேர் மீது வழக்கு..!!
previous post