Monday, May 20, 2024
Home » கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தனியார் பேருந்து மோதி 3 பேர் பலி: 24 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தனியார் பேருந்து மோதி 3 பேர் பலி: 24 பேர் படுகாயம்

by Arun Kumar

வடலூர்: வடலூர் அருகே ராசாக்குப்பம் கிராமத்தில் நேற்று மதியம் தனியார் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒரு மூதாட்டி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூரில் இருந்து விருத்தாசலத்திற்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு தனியார் பஸ் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அதிவேகமாக வந்த இந்த பஸ் வடலூர் அருகே ராசாகுப்பம் கிராமத்தில் வந்த போது டயர் பஞ்சராகி எதிரே வந்த கார் மீது மோதி நிற்காமல் சாலையோர நின்ற இரு சக்கர வாகனத்தின் மோதி நின்றது.

இதில் மாருதி ஸ்விஃப்ட் காரில்(TN 32 AK 9116,) ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் தனது உறவினர் திருமணத்திற்கு சென்று திருமணம் முடிந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த அந்தோணிசாமி மனைவி விக்டோரியா (65) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த ஞான பிரகாசம் (52) அவரது மனைவி குணசீலி 50 ;மகள் ரித்திகாமேரி (10) உறவினர் பொன்னம்மாள் (60) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த கோதண்டபாணி மகன் தாமரைச்செல்வன் (23) ஏழப்பன் மகன் விஜயகுமார் (22) ஆகியோர் நெய்வேலியில் சமையல் வேலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாத்தப்பாடி சென்று கொண்டிருந்தவர்கள் அதிவேகமாக வந்த பஸ் காரின் மீது மோதியதை பார்த்துவிட்டு சாலை ஓரம் மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு நின்றிருந்தனர்.

அப்போது இவர்கள் மீதும் பஸ் மோதியதில் தாமரைச்செல்வன்,விஜயகுமார் பேருந்தின் சக்கரத்தின் உட்பகுதியில் சிக்கிக்கொண்டனர்.இதனைக் கண்ட பொதுமக்கள் அருகில் உள்ள வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பேருந்தில் சிக்கிக் கொண்டு தவித்த இருவரையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு பேருந்து நகர்த்தி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் மீட்டனர் அதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து விக்டோரியா, தாமரைச்செல்வன், விஜயகுமார் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த படுகாயம் அடைந்த ஊமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி ராஜேஸ்வரி (30) வன்னியர்பாளையம் கோவிந்தராஜ் மகன் ஜெய்சங்கர் (53) காரைக்கால் தனசேகர் மகள் அர்ச்சனா (20) பச்சை பெருமாள் கோயில் குமாரலிங்கம் மகள் துர்கா தேவி (31); விருத்தாசலம் ஜெயராமன் மகன் மணிகண்டன் (42); வளர்மதி (33); குமுதா (45); மனோரஞ்சிதம் (67) சக்திவேல் (31) மாலதி (32) உட்பட 24 பேர் காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் 15 பேர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கடலூர் டிஎஸ்பி பிரபு நேரில் சென்று விபத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.மேலும் இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் தப்பி ஓடிய பேருந்து டிரைவர் கண்டக்டர் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi