மதுரை : கிரிஸ்டல் பந்தை தடை செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு ஏன் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏப்.2-க்குள் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என்றால் மத்திய அரசுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீரில் போட்டால் பல மடங்கு உருவத்தில் பெரிதாகும் கிரிஸ்டல் பந்து தமிழகம் முழுவதும் கடைகளில் விற்கப்படுகிறது.