ஆரணி, நவ.11: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்ைக மேற்கொள்ளப்படும் என டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரணி சப்-டிவிஷனுக்குட்பட்ட ஆரணி டவுன், தாலுகா, களம்பூர், கண்ணமங்கலம், சந்தவசால் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து காவல்நிலையங்களில் சரித்திர பதிவேடு, எச்எஸ் குற்றவாளிகள், பழைய குற்றவாளிகள், ரவுடிகள் என 20க்கும் மேற்பட்ட நபர்களை ஆரணி நகர காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு எச்சரிக்கப்பட்டது.