Wednesday, May 15, 2024
Home » கிரசண்ட் கல்லூரி 13வது பட்டமளிப்பு விழா

கிரசண்ட் கல்லூரி 13வது பட்டமளிப்பு விழா

by Ranjith

சென்னை: பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியின் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், 93 பிஎச்டி, 599 பிஜி மற்றும் 1712 யுஜி உள்பட மொத்தம் 2404 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். முதலிடம் பெற்றதற்காக 53 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 32 மாணவர்கள் யுஜி மற்றும் 21 மாணவர்கள் பிஜி படித்தவர்கள். கட்டுப்பாடுகளின் அடிப்படையில் 671 மாணவர்கள் நேரில் பட்டம் பெற்றனர். 1680 மாணவர்கள் ஆன்லைனில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில், சிஎஸ்ஐஆர் மற்றும் செயலாளர் டிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் என்.கலைச்செல்வி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் BSACIST பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜிஸ் அதிபர் குர்ரத் ஜமீலா, சார்பு அதிபர் அப்துல் காதர் ஏ.ரஹ்மான் புஹாரி, துணைவேந்தர் டி.முருகேசன், பதிவாளர் என்.ராஜா ஹூசைன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்பட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிஎஸ்ஐஆர் மற்றும் செயலாளர் டிஎஸ்ஐஆர். என். கலைச்செல்வி பேசுகையில், ‘‘பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இந்தியா, அற்புதமான 21ம் நூற்றாண்டிற்கு தயாராக உள்ளது. ஒரு கல்வி நிறுவனம் பிஎஸ்ஏ கிரசண்ட் சமூகப் பொறுப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கிறது, இது ஒரு முக்கிய சக்தியாகும். இதை கொண்டு எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைப்போம்’’ என்றார்.

You may also like

Leave a Comment

twenty − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi