சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி பாபநாசம் (40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பட்டாசு ஆலைக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று மாலை மணிமருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமானது. மேலும் அருகில் உள்ள 2 அறைகளும் சேதமடைந்தன. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.