நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் மகளிர் கல்லூரியில் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் ஓணம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கேரளா மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருவிழா வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமான அனைத்து வீடுகளிலும் பூகோளம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் குன்னூரில் தனியார் கல்லூரியில் ஓணம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து மாவேலி மன்னனை வரவேற்கும் விதமான பல வண்ண பூக்களால் அத்திப்பூ கோலமிட்டு மலையாள பாடல்களுக்கு மாணவிகள் பேராசிரியைகள் நடனமாடி அசத்தினர்.அப்போது செண்டை மேளம் இசைக்க நடைபெற்ற கேரள பாரம்பரிய கதகளி நடனமும் காண்போரை வெகுவாக கவர்ந்தது. இதில் சாதி மத வேறுபாடு கடந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் ஒன்றாக இணைந்து ஓணம் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.