ஆவடி: செல்போனில் பேசியபடி தவறி விழுந்த கட்டிடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார். ஆவடி அடுத்த பட்டாபிராம் தென்றல் நகர் பகுதியில் வசித்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல்குமார்(23). கட்டிட தொழிலாளி. இவருடன் வடமாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் தனி வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை 6 மணி அளவில் ராகுல்குமார் முதல் தளத்திலிருந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். மற்ற நான்கு பேரும் உறங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்நிலையில் நடந்து கொண்டே பேசியவர் திடீரென தவறி கீழே, உயர் மின் அழுத்த கம்பி மீது விழுந்துள்ளார். இதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும், பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.