டெல்லி : காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், தனது பதவி போதையில் ஒன்றிய பாஜக அரசு முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஆழமான தாக்குதல்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.