சென்னை: திருமணத்தின்போது தனக்கு போடப்பட்ட நகைகளை தன் கணவரிடம் இருந்து வாங்கித் தருமாறு போலீசில் மனைவி முறையீடு செய்துள்ளார். போலீசாரிடம் மனைவி முறையிட்ட பின், 95 சவரன் நகைகளை காவல் ஆய்வாளர் கீதாவிடம் கணவர் ஒப்படைத்துள்ளார். புகார்தாரர் ராஜேஷ் ஒப்படைத்த 95 சவரன் நகைகளை, அவரது மனைவிடம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆய்வாளர் கீதா நகைகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். புகார்தாரரின் நகைகளை அடகு வைத்தது உறுதியானதை அடுத்து காவல் ஆய்வாளர் கீதாவை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ஆணையிட்டுள்ளார்.