மக்களவை தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த பிறகும் மொத்த வாக்கு சதவீதத்தை ஆணையம் தெரிவிக்காதது விபரீதமானது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு குறித்தும் தற்காலிக கணக்குகளையே அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஒரு மக்களவைத் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பது கூட தேர்தல் ஆணைய இணையதளத்தில் இல்லை. இந்நிலையில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அர்த்தமற்றதும், திசை திருப்புவதும் ஆகும் என்று கூறியுள்ளார்.