காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இருந்து தக்கோலம் நோக்கி சென்ற கல்லூரி பேருந்து, மப்பேடு அருகே எஞ்சின் பகுதியில் புகை வந்ததால் பதற்றம் நிலவியது. தீப்பற்றி எரிவதை பார்த்ததும் உள்ளிருந்த மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 14 பேரும் உயிர் தப்பினர்.