சென்னை : கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டையை சேகரிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டது. ஆசிரியர் கல்வியியல் பல்கலை. கீழ் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை சேகரிக்க ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார். ஆளுநரின் வாய்மொழி உத்தரவின்பேரில் கல்லூரி முதல்வர்களுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பதிவாளர் கடந்த 14-ல் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.