மதுரை: ராமேஸ்வரம் ஸ்ரீமத் வித்தியாலயா பள்ளி செயல்பட தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உரிய அனுமதியின்றி ஸ்ரீமத் வித்தியாலயா பள்ளி செயல்படுவதாக சத்தியமூர்த்தி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர், ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.