கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான 2 பேரை உக்கடம் பகுதிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முகமது அசாருதீன், இதிரீஸ் ஆகிய இருவரை உக்கடம் பகுதிக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடம் பகுதியில் கார் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.