கோவை: கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனியர் மாணவர்கள் மாதவன். மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்துள்ளனர். மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டை அடித்ததாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து 7 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.