கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான பாரத் நியூ-எனர்ஜி நிறுவனம் (பிஎன்சி), தனது முதல் டீலர்ஷிப்பை சென்னை போரூரில் ‘கிராண்ட் மோஸ்’ என்ற பெயரில் திறந்துள்ளது. இதில் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 என்ற டூ வீலரை அறிமுகம் செய்துள்ளது. இதில், எட்ரால் 40 பேட்டரி 2.1 கிலோவாட் பேட்டரி உளள்து. சிறப்பு சலுகையாக பேட்டரிக்கு 5 ஆண்டு கூடுதல் உத்தரவாதமும், சேஸ்ஸில் 7 ஆண்டுகள் மற்றும் மோட்டருக்கு 3 ஆண்டுகள் கூடுதல் உத்தரவாதம் அளிக்கிறது.
பிஎல்டிசி ஹப் மோட்டார் இடம் பெற்றுள்ளது. 14 அங்குல அலாய் வீல் இடம் பெற்றுள்ளது. டிஸ்க் பிரேக்குகளும் உள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகம் வரை செல்லும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ தூரம் வரை செல்லலாம். முழுமையாக சார்ஜ் செய்ய மூன்றரை மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.