கோவை: செட்டிபாளையம் பகுதியில் காதலன் பிரசாந்த் கொலை செய்யப்பட்ட நிலையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தன்யா மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையில் தற்கொலை செய்துகொண்டார். குடிபோதையில் காதலியின் வீட்டில் தகராறு செய்ததாக 5ம் தேதி பிரசாந்த் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பிரசாந்த் கொலை வழக்கில் தன்யாவின் உறவினர் விக்னேஷை செட்டிபாளையம் போலீஸ் கைது செய்துள்ளது.