கோவை: கோவை நட்சத்திர விடுதியில் நூதன முறையில் ரூ.11 லட்சம் கொள்ளையடித்தது தொடர்பாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதியில் காசாளராக இருந்த பிரகாஷ் என்பவர் தனது மனைவி மோகன பிரியாவுக்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இதர செலவுகளுக்கான பணத்தை தனது மனைவி வங்கிக் கணக்கிற்கு மாற்றி நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளார். விடுதி நிர்வாகம் அளித்த புகாரில் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.