சென்னை: கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். சிவலிங்கேஸ்வரர் சீடர்கள், மாணவர்கள், சமயப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேற்கு மண்டலத்தில் ஆன்மீக வளர்ச்சி, சமூக மேம்பாட்டுக்காக பாடுபட்ட அப்பழுக்கற்ற துறவி சிவலிங்கேஸ்வரர் என்றும் அவர் தெரிவித்தார்.