சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசைப் பாராட்டிய மத்திய குழுவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மிக்ஜாம் புயல் நிவாரணமாக ஒன்றிய அரசு ரூ.12,659 கோடி வழங்க வேண்டும் என புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்து முடித்து ஆலோசனை நடத்திய ஒன்றிய அரசின் குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். புயல், மழையால் சேதமடைந்த சாலைகள், பள்ளி கட்டடங்களை சீர் செய்திட நிதி உதவி தேவைப்படுகிறது. தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயல் நிவாரணமாக ஒன்றிய அரசு ரூ.12,659 கோடி வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
previous post