பெரம்பூர்: கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (50). வியாசர்பாடி எம்கேபி நகர் மேற்கு அவென்யு சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த 3 பேர், வீண் தகராறு செய்து, கடையில் இருந்த கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை உடைத்தனர். இதில் உடைந்த கண்ணாடி ஒருவரின் காலில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவருடன் இருந்த நண்பர்கள் நரம்பு அறுந்து விட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும், என மகேஸ்வரனை மிரட்டி மகேஸ்வரனை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். வழியில் மகேஸ்வரனை சரமாரிதாக்கி,அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த ராஜி (34), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபு (30), மற்றும் கலைமணி (28) ஆகிய 3 பேர் மகேஸ்வரனை தாக்கியது தெரியவந்தது. அவர்களை நேற்று மாலை கைது செய்தனர்.