Monday, June 3, 2024
Home » கிளாம்பாக்கத்தில் நடந்து வரும் புதிய ரயில் நிலைய பணிகளை ஆகஸ்ட்டில் முடிக்க திட்டம்: அதிகாரிகள் தகவல்

கிளாம்பாக்கத்தில் நடந்து வரும் புதிய ரயில் நிலைய பணிகளை ஆகஸ்ட்டில் முடிக்க திட்டம்: அதிகாரிகள் தகவல்

by Karthik Yash

சென்னை: கிளாம்பாக்கத்தில் நடந்து வரும் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த கட்டுமானப் பணிககள் விறுவிறுப்பாக நடக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம். இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் சில கி.மீ தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும். மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, ரயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

You may also like

Leave a Comment

8 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi