டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஐ.யூ.எம்.எல். வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியானதை தொடர்ந்து அச்சட்டம் அமலுக்கு வந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.