திருமலை: சித்தூரில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஆந்திர ஆளும்கட்சி எம்எல்ஏ பவன்கல்யாணை நேரில் சந்தித்து பேசினார். ஆந்திர மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையி சித்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆரணி நிவாசுலு எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் மீண்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் விஜயானந்தாவை வேட்பாளராக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இதனால் அதிருப்தியில் இருந்த ஆரணி நிவாசுலு நேற்று நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாணை விஜயவாடா, மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். விரைவில் ஆரணி நிவாசுலு, ஜனசேனா கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.