கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் நேற்று தனியார் யோகா சாதனை நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கத்தைச் சார்ந்த செந்தில்குமார் செல்வி ஆகியோரின் மகன் எஸ்.சிவமணி தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சிவமணி கடந்த இரண்டு ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் உள்ள கைரளி யோகா வித்யா பீடத்தில் யோகா பயிற்சியாளர் ராதாகிருஷ்ணனிடம் யோகா பயின்று வருகிறார்.
இவர் சின்ன ஓபுளாபுரத்தில் உள்ள 22 அடி அகலம் 34 அடி உயரம் 30 அடி அளவு தண்ணீர் நிரம்பிய கிணற்றில் 11 மணி 15 நிமிட நேரம் மிதந்து மத்தியாசானம் செய்தார். இந்த நிகழ்வு இந்தியா புக் ஆஃப் அச்சிவர்ஸ், வேர்ல்ட் புக் ஆப் அச்சிவர்ஸ், அசிஸ்ட் வோல்ட் ரெக்கார்ட், தமிழன் புக் ஆஃப் அச்சீவர்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது. இவரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பாமக மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் சிவமணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.