பெய்ஜிங்: சீனாவின் யூனான் மற்றும் ஷான்க்சி மாகாணத்தில் கனமழை கொட்டியதில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யூனான் மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. பள்ளத்தாக்கு பகுதியில் நகரம் உள்ளதால் பெருமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும்.
இதனால் நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல வடமேற்கு பகுதியில் ஷான்க்சி மாகாணத்தில் ஷெண்பா நகரில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் அபாயகரத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஷெண்பா நகரில் பெரும்பாலான சாலைகள், வீடுகள் கனமழையால் சேதமடைந்துள்ளன.