சென்னை: பிள்ளைகள் கவனிக்கவில்லை என மூத்தோர் தரும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முறையாக விசாரணை நடத்தி, மூத்த குடிமக்கள் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது ஆட்சியரின் கடமை என ஐகோர்ட் கூறியுள்ளது. திருப்பூர் பாட்ஷா-ஷகிரா பேகம் தம்பதிக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். பெற்றோரை கவனிப்பதாக மூத்த மகன் முகமது தயான் அளித்த உத்தரவாதத்தின் பேரில் ஷகிரா பேகம் தனது சொத்தை தயான் பேரில் எழுதி வைத்தார்.