இடைப்பாடி: சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் ஆவடத்தூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(27). இவரது மனைவி பவித்ரா(24). இவர்களுக்கு புகழ்(6), வெற்றிவிழி(4) என்ற குழந்தைகள் உள்ளனர். விடுமுறையையொட்டி, இவர்கள் நண்பர்கள் யுவராஜ்(28), ஜோதிவேல்(16) ஆகியோருடன் 2 டூவீலர்களில் நேற்று பூலாம்பட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு மூலப்பாறை பகுதியில் காவிரியில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பவித்ராவும், அவரை காப்பாற்ற சென்ற ஜனார்த்தனனும் நீரில் மூழ்கி பலியாகினர். குழந்தைகள், நண்பர்கள் கதறி அழுதனர்.