Tuesday, May 21, 2024
Home » குழந்தை இல்லாததால் குடும்பத்தில் தகராறு இளம்பெண் தீக்குளித்து தற்கொலையில் கணவன் கைது

குழந்தை இல்லாததால் குடும்பத்தில் தகராறு இளம்பெண் தீக்குளித்து தற்கொலையில் கணவன் கைது

by Lakshmipathi

போளூர் : குழந்தை இல்லாததால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இளம் பெண்ணின் கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன்(28), கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தியா(23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லையாம்.

இதனால் இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. குழந்தை இல்லாததை காரணமாக காட்டி கணவர் சீனுவாசன் அவரது பெற்றோர் நடராஜன், எல்லம்மாள் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்களாம். இது தொடர்பாக ஏற்கனவே போளூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சந்தியா புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இறந்த சந்தியாவின் தாயார் வெங்கடேஸ்வரி போளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஹேமாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து கடந்த 24ம் தேதி ஓகூர் கிராமத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள் இது தற்கொலை போல் ஜோடிக்கப்பட்டுள்ளது. சந்தியாவை அவரது கணவர் சீனுவாசன் வரதட்சனை கொடுைம செய்து அதன் உச்சகட்டமாக மனைவியை தீவைத்து எரித்து கொலை செய்துள்ளார். அவரை கைது செய்யும்வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி முருகாபாடி கூட்ரோடில் ஒரு மணிநேரம் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்ககு சென்ற போளூர் டிஎஸ்பி சி.நல்லு, இந்த வழக்கு தொடர்பாக கோட்டாட்சியரிடம் விசாரணை முடிந்துள்ளது. அவர் அறிக்கை எங்களுக்கு கிடைத்த பிறகு தான் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து நேற்று கோட்டாட்சியர் விசாரணையின் அடிப்படையில் தற்கொலைக்கு துண்டுதலாக இருந்ததாக சீனுவாசளை நேற்று போளூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும், சந்தியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எரித்து கொல்லப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

16 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi