சென்னை: மனச்சான்றுபடி பணியாற்றும் துணிச்சல்மிக்க பத்திரிகையாளர் அனைவருக்கும் எனது பாராட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது; உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.