சென்னை: விளையாட்டுத் துறை கேப்டனாக இருந்து அனைத்து விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக மாற்றி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முடித்த பிறகு பன்னாட்டு போட்டிகளை நடத்தும் சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது எனவும் கூறினார்.