சென்னை: சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிட்ட ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் சிஏஏ மூலம் கரையேற முயற்சிக்கிறார் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தை கொண்டு வந்த பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்று கூறினார்.