சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்த தமிழ்நாடு அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். ஆலையை திறக்கலாமா என ஆராய குழு அமைக்க உச்ச்சநீதிமன்றம் முன்வந்தபோது தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது.