சென்னை: சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்வது குறித்து புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாவட்ட சமூக நல அதிகாரி உள்ள நிலையில், குழந்தை திருமணங்களை தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு எதற்கு? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சிதம்பரம் கோவிலில் குழந்தை திருமணங்களை தடுக்க நிரந்தர குழு அமைக்கக் கோரி வழக்கறிஞர் சரண்யா தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.