Friday, May 10, 2024
Home » சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல.. கனகசபை தரிசன நடைமுறையை மாற்ற அதிகாரமில்லை: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை பதில்

சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல.. கனகசபை தரிசன நடைமுறையை மாற்ற அதிகாரமில்லை: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை பதில்

by Nithya

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. நடராஜர் கோயில் பொன்னம்பல மேடையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த ஆண்டு மே 17-ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு மக்களின் பங்களிப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு பொது கோயில் என்றும் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆண்டு ஆண்டுகாலமாக பின்பற்று வந்த கனகசபையில் இருந்து தரிசனம் செய்யும் நடைமுறை கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், பக்தர்களை கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில் பொதுமக்கள், தீட்சிதர்கள் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்தும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் அளித்த அறிக்கைகளை பரிசீலித்தும் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. கனகசபையில் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கனகசபை தரிசனத்திற்கு அனுமதி அளித்ததை எதிர்ப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது எனவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதித்து அரசாணை மூலம் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில், எந்த தகுதியும் இல்லாதா இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணை டிசம்பர் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi