ராய்பூர்: காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாள்களின் பெயர்களை நேற்று முன்தினம் இரவு அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜன்தா காங்கிரஸ் சட்டீஸ்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. இந்த முறை இந்த கட்சிகள் இதுவரை கூட்டணி குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.