சென்னை: சென்னை வேளச்சேரியில் விபத்து ஏற்பட்ட 50 அடி பள்ளத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென்று மண்சரிவு ஏற்பட்டதால் சீரமைப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். பள்ளத்தில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளதாகவும் அவரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.