சென்னை: சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததற்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளனர். வி.பி.சிங்கை இந்திய வரலாறு மறக்கக்கூடாது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னையில் சிலை அமைக்கபப்டும் என்று அறிவித்ததற்கு சதன் நன்றி தெரிவித்துள்ளார். திராவிட இயக்கம், கலைஞரை நேசித்த வி.பி.சிங்குக்கு சிலை வைப்பதை வரவேற்கிறேன் என நாகை மாலி தெரிவித்தார். சமூகநீதியின் மைல்கல் என்று பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி பாராட்டியுள்ளார்.