Friday, May 10, 2024
Home » சென்னை தீவுத்திடலில் புதுப்பிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை தீவுத்திடலில் புதுப்பிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

by Porselvi

சென்னை: சென்னை தீவுத்திடலில் புதுப்பிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பச்சை நிறத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள், பி.எஸ்.4 ரக தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதை தொடர்ந்து நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதன்படி தமிழகத்தில் தற்போது புறநகர் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகர பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. அதிலும் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துஇளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி அடிச்சட்டம் நல்ல நிலையில் இயக்கத்தில் உள்ள பேருந்துகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு அவற்றுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவையும் விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் முதல்கட்டமாக 100 பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தன. இந்த பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi