சென்னை: சென்னையில் நாளை முதல் நடைபெற உள்ள ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 417 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா, அனாஹத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதான பிரிவில் 174 ஆண்கள், 63 பெண்கள் உட்பட 11 பிரிவில் 417 பேர் பங்கேற்பதாக ஸ்குவாஷ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.