சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் குறும்படம் எடுப்பதாக மிட்டாய் வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மிட்டாய் வியாபாரி பிரச்சன்ன குமார் அளித்த புகாரில் சுஜாதா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி புகாரில் தொடர்புடைய ரிஸ்வான் என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.