சென்னை: சென்னை தாம்பரம் அருகே ரூ.535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் பழுதடைந்தது. சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு 1,000 கோடி கொண்டு சென்ற 2 வாகனங்களில் ஒன்றில் பழுதானது. தாம்பரம் அருகே வாகனம் பழுதானதால் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணத்துடன் நிற்கும் வாகனத்திற்கு தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த பின் பணத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.