சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது குறித்து தீர்வு தெரிவிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றத் தீர்வு தெரிவிக்க தமிழக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.