சென்னை: சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞர் பிரவீனின் மனைவி ஷர்மிளாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் பிரவீனின் பெற்றோரிடம் ஷர்மிளாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலைக்கு தனது பெற்றோரும், சகோதரர்களுமே காரணம் என ஷர்மிளா கடிதம் எழுதியிருந்தார். ஷர்மிளாவின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரவீனின் பெற்றோர் உடலை வாங்க மறுத்திருந்தனர்.