சென்னை: சென்னை பெருங்குடியில் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் புழல் சிறையில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது. மார்ச் 25-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஜெய்கணேஷ் கொலை வழக்கில் வழக்கறிஞர் நூர்தீன், கணேசன் ஆகியோரை துரைப்பாக்கம் போலீஸ் கைது செய்தது.