Wednesday, May 22, 2024
Home » வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.53,000ஐ தாண்டி விற்பனை; நகை விரும்பிகள் ஷாக்!!

வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.53,000ஐ தாண்டி விற்பனை; நகை விரும்பிகள் ஷாக்!!

by Porselvi

சென்னை: சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 53 ஆயிரம் ரூபாயை கடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரமாகவே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 28ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.50 ஆயிரத்தையும், 29ம் தேதி சவரன் 51 ஆயிரத்தையும் கடந்தது. ஏப்ரல் 1ம் தேதி சவரன் ரூ.51,560 ஆக உயர்ந்தது. 2ம் தேதி சற்று குறைந்து ரூ.51,440க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. 4ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360க்கு விற்கப்பட்டது.

5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரனுக்கு ரூ.180 குறைந்து ஒரு சவரன் ரூ.52,080க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுபடியும் 6ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 45 ரூபாய் அதிகரித்து 6,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் 360 ரூபாய் அதிகரித்து 53,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு இதற்கு முன்னர் இருந்த அனைத்து உச்சத்தையும் முறியடித்தது. இது இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்தது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து ரூ.88க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்தது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து அதிகரிக்க செய்துள்ளது.

You may also like

Leave a Comment

13 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi